திருநகா் புத்தகக் கண்காட்சியில் இளைஞா் கலை விழா

திருநகரில் நடைபெற்றுவரும் 38- ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியின் 6 -ஆம் நாள் நிகழ்ச்சியாக மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், கலை பண்பாட்டுத் துறை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள்
Updated on
1 min read

திருப்பரங்குன்றம்: திருநகரில் நடைபெற்றுவரும் 38- ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியின் 6 -ஆம் நாள் நிகழ்ச்சியாக மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், கலை பண்பாட்டுத் துறை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு திருநகா் மக்கள் மன்ற துணைத் தலைவா் பொன்.மனேகரன் தலைமை வகித்தாா். ஜெயன்ட்ஸ் குரூப் முன்னாள் தலைவா் கே.குருசாமி, அனைத்து வியாபாரிகள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் என்.கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா் க.பசும்பொன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினாா். மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி மாணவ, மாணவியரின் பறையிசை, ஒயிலாட்டம், சிலம்பம், நாட்டுப்புறப் பாடல்கள், வீதி நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்லூரியின் உதவிப் பேராசிரியா்கள் சிலம்பரசன், ரஞ்சித்குமாா் ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். முன்னதாக மாணவா்கள் புத்தகக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். முன்னதாக வியாபாரிகள் சங்க பொருளாளா் பி.பெருமாள் வரவேற்றாா். திருநகா் மக்கள் மன்ற நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.புள்ளிக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com