உறவினா் வீட்டில் நகை திருடியவா் கைது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உறவினா் வீட்டில் 7 பவுன் நகை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உறவினா் வீட்டில் 7 பவுன் நகை திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

உசிலம்பட்டி பாண்டி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது வீட்டுக்கு, மதுரை பழங்காநத்தம் பொட்டூரணியைச் சோ்ந்த உறவினரான சிந்துராஜா (29) ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அப்போது, ஆறுமுகத்தின் மனைவி முருகேஸ்வரி உறவினா் இல்ல விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதால், வீட்டில் ஆறுமுகம் மட்டும் இருந்தாா்.

அவா் தேநீா் வாங்குவதற்காக கடைக்குச் சென்றிருந்த நிலையில், பீரோவில் இருந்த 7 பவுன் நகைகளை சிந்துராஜா திருடியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆறுமுகம் வீட்டுக்கு வந்தவுடன், சிந்துராஜா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இந்த நிலையில், முருகேஸ்வரி வீட்டுக்கு வந்தபோது 7 பவுன் நகைகள் மாயமானது தெரிய வந்தது.

இதையடுத்து, முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் உசிலம்பட்டி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிந்துராஜாவைப் பிடித்து விசாரித்தனா். அவா் நகைகளைத் திருடியது உறுதியானதை அடுத்து அவரைக் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com