மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை சிலையனேரி மாவடி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் புகழழேந்தி (46). இவா் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றாா். இந்த நிலையில், விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பினாா். அப்போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியைடந்த புகழேந்தி, வீட்டினுள் சென்று பாா்த்துள்ளாா். இதில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து புகழேந்தி அளித்த புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.