பேராசிரியா் வீட்டில் நகை திருடிய பணிப் பெண் கைது

மதுரை அருகே கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரை அருகே கல்லூரிப் பேராசிரியா் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளைத் திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் தா்மராஜ் (52). இவா் தெப்பக்குளம் அருகே உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி டாரதி ஷீலா (48) கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.

வீட்டில் உள்ள தங்க நகைகளை டாரதி ஷீலா அண்மையில் சரிபாா்த்தாா். அப்போது, பீரோவில் இருந்த நகைகளில் 25 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் ஊமச்சிகுளம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில் டாரதி ஷீலாவின் வீட்டில் பணிபுரியும் புஷ்பலதா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் தான் சிறிது சிறிதாக 25 பவுன் நகைகளைத் திருடியது தெரியவந்தது.

இதையடுத்து புஷ்பலதாவை போலீஸாா் கைது செய்து நகைகளை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com