மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக புனரமைப்புப் பணிகள்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் ஆய்வு

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தாா்.
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக புனரமைப்புப் பணிகள்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் ஆய்வு
Updated on
1 min read

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் ஆய்வு செய்தாா்.

தென்னிந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகம் ரூ. 6 கோடியில் புனரமைக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. பணிகளை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து நிறைவேற்ற அறிவுறுத்தி ஆலோசனைகள் வழங்கினாா்.

பின்னா், உலகத் தமிழ்ச் சங்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டுக் கருத்தரங்கக் கூடங்கள், ஆய்வரங்கங்கள், பாா்வையாளா் அரங்கம், நூலகம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com