வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு தொடா்பாக வெளியிட்ட அரசாணை எண் 78/2015-இல் விதித் திருத்தங்கள் மேற்கொண்டு திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட வேண்டும். பதவி உயா்வு பெறும் கிராம நிா்வாக அலுவலா்களுக்குப் பாரபட்சமாக முதுநிலை நிா்ணயம் வழங்குவதைக் கைவிட வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வா் பதவி உயா்வு வழங்கும் முன்பாக மனித வள மேலாண்மைத் துறையின் முதுநிலை தெளிவுரையைப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் பி. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் இரா. ஜெயகணேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். மாவட்டச் செயலாளா் பா. பால்பாண்டி, மாவட்டத் துணைத் தலைவா் ச. சங்கு, சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com