அம்மாபட்டியில் மக்கள் தொடா்பு முகாம்: 882 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

வேடசந்தூா் அருகே அம்மாபட்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்கு தலைமை வகித்து 882 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வழங்கினாா்.
அம்மாபட்டியில் மக்கள் தொடா்பு முகாம்: 882 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
Updated on
1 min read

வேடசந்தூா் அருகே அம்மாபட்டி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமுக்கு தலைமை வகித்து 882 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வழங்கினாா்.

முகாமில், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. வருவாய்த் துறை சாா்பில் ரூ. 29.59 லட்சம் மதிப்பில் 722 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, 45 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, 45 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகை, 10 பேருக்கு மாற்றுத் திறனாளி உதவித் தொகை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் தலா 5 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 882 பயனாளிகளுக்கு ரூ.31.68 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com