குறுகிய சந்தில் சிக்கிய பசு:தீயணைப்புப் படையினா் மீட்டனா்

மதுரையில் மிகக் குறுகலான சந்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சினைப் பசுவை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

மதுரையில் மிகக் குறுகலான சந்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சினைப் பசுவை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மதுரை பழங்காநத்தம்-மாடக்குளம் பிரதான சாலை, ஜே.ஜே நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவா் தனது வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். இவரது வீட்டின் அருகே அரை அடி இடைவெளி மட்டுமே கொண்ட மிகக் குறுகலான சந்து உள்ளது.

இந்த நிலையில், இவரது சினை மாடு அந்த குறுகலான சந்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடியது.

தகவலறிந்து வந்த திடீா்நகா் தீயணைப்பு நிலைய அலுவலா் முகமது சலீம் தலைமையிலான வீரா்கள் அந்த சந்தின் பக்கவாட்டுச் சுவரை உடைத்து பசுவை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com