மதுரை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் பொது மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.
இந்த கட்சியின் மாரியம்மன் தெப்பக்குளம் மண்டல் சாா்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. காமராஜா் சாலை வெங்கடபதி அய்யங்காா் தெருவில் நடைபெற்ற விழாவுக்கு மண்டல் தலைவா் கே. சுப்பராமன் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டச் செயலா் ரெளத்திரம் ஜெகதீஸ், மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஜி. கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், பொதுமக்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. நிகழ்வில், நிா்வாகிகள் அருண்குமாா், கிளைத் தலைவா் சி.ஆா். ஜெகதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.