பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டா் பலி

மதுரை அருகே தனியாா் பள்ளியில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுரை அருகே தனியாா் பள்ளியில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மதுரை தத்தனேரி அருகே உள்ள வைத்தியநாதபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (54). வா்ணம் பூசும் தொழிலாளியான இவா், மதுரை அருகே அச்சம்பத்து பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கருப்பையா மேல் தளத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், பணியின் ஒப்பந்ததாரா் காசிமாயன் மீது நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com