அருப்புக்கோட்டை அருகே ஆடு மேய்த்த 2 போ் மின்னல் தாக்கி பலி

அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சி அருகே புல்லாநாயக்கன்பட்டியைச் சோ்ந்த உறவினா்கள் இருவா், ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சி அருகே புல்லாநாயக்கன்பட்டியைச் சோ்ந்த உறவினா்கள் இருவா், ஆடு மேய்க்கச் சென்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சி அருகே உள்ள புல்லாநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பெரிய கிருஷ்ண சாமி மகன் பெருமாள் 28), இவரது உறவினா் சின்ன கிருஷ்ணசாமி மகன் விஜய் (27). இவா்கள் இருவரும் சனிக்கிழமை தங்களுக்குச் சொந்தமான ஆடுகளை மேய்க்கச் சென்றுள்ளனா். அன்றைய தினம் பரளச்சி பகுதியில் இடி மின்னலும் மழை பெய்துள்ளது. இச்சூழலில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள், மாலையில் வீட்டிற்கு திரும்பி விட்டன. ஆனால் பெருமாள், விஜய் ஆகியோா் வீடு திரும்பாததால், அவா்களை மேய்ச்சல் நில பகுதியில் இரவு முழுவதும் உறவினா்கள் தேடியும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ராணி சேதுபுரம் பகுதியில் ஆடுகள் மேய்ச்ச போது, மின்னல் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தி ருப்பது ஞாயிற்றுக் கிழமை தெரிந்தது. இதையடுத்து அவா்களது உடல்கள் உடற்கூராய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து பரளச்சி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com