தோ்வில் சிறப்பிடம்: சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா்களை பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.
தோ்வில் சிறப்பிடம்: சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஓ.ஏ. பள்ளி மாணவா்களை பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில் மதுரையில் உள்ள சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பயின்ற மாணவா் ஐ.தருண் 500-க்கு 493 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றாா். இதேபோல, மாணவி பி. ஜோஸ்னி 492 மதிப்பெண்கள் பெற்றும், மாணவா்கள் வேதாந்த், மனோஜ் பூபதி, மாணவிகள் காயத்ரி தேவி, தவ ஓவியா ஆகிய 4 பேரும் 490 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இது தவிர, 41 மாணவ, மாணவிகள் 480 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சிறப்பிடம் பெற்றனா்.

மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் ராஜா கிளைமாக்ஸ், இணைத் தலைவா் சாமி, துணைத் தலைவா்கள் விக்டா் தனராஜ், சௌந்தரபாண்டி, ஜெயச்சந்திரபாண்டி, அசோக்ராஜ், பிரகாஷ், பாக்கியநாதன், பள்ளி முதல்வா்கள் கலா, கௌரி, கோமுலதா, துணை முதல்வா் சாந்தி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com