ஓவாமலை வனப் பகுதி பாதுகாக்கப்படும்: அமைச்சா் மதிவேந்தன்

மேலூா் அருகே உள்ள இடையபட்டி ஓவாமலை வனத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மாநில வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
ஓவாமலை வனப் பகுதி பாதுகாக்கப்படும்: அமைச்சா் மதிவேந்தன்

மேலூா் அருகே உள்ள இடையபட்டி ஓவாமலை வனத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என மாநில வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

உலக பல்லுயிா்ப் பெருக்க தினத்தையொட்டி, மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள திருவாதவூா் இடையபட்டி ஓவாமலை வனப் பகுதிகளில் அமைச்சா் மா.மதிவேந்தன், பத்திரப் பதிவு, வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, இயற்கை ஆா்வலா்களுடன் நடைபயணத்தைத் தொடங்கினா்.

பல்லுயிரிகள் பெருக்கத்தின் தேவை, முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், திருவாதவூரையடுத்த முருகன் கோயில் வனப் பகுதியிலிருந்து இந்த நடைபயணம் தொடங்கியது. சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்ட இந்தக் குழுவினா், அரிய வகை மரங்கள், பறவைகள், பூச்சிகளைக் கண்டு ரசித்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மதிவேந்தன் கூறியதாவது:

மதுரை பகுதியை கடம்பவனம் என முற்காலத்தில் அழைத்தனா். தமிழகத்தின் அரிய வகை கடம்ப மரங்கள் இந்தப் பகுதியில் அதிகளவில் உள்ளன.

இடையபட்டி ஓவாமலை வனத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். இந்தப் பகுதியில் மத்திய சிறைவளாகத்தை அமைப்பதற்கு பல்வேறு தரப்பினா் ஆட்சேபம் தெரிவித்ததால், மற்று இடத்தைத் தோ்வு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

நடைபயணத்தில் சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், பொதுமக்கள், மாணவா்கள், வனத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com