கடன் பிரச்னையைத் தீா்த்து வைக்கக் கோரி, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே தற்கொலைக்கு முயன்ற தாய், மகன் மீது சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் அருகேயுள்ள ஆமத்தூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தவசியப்பன் மனைவி நாகலட்சுமி (62). மகன் சிவமூா்த்தி (37). இவா்கள் இருவரும், வீட்டு அடமானக் கடன் பிரச்னையை தீா்க்கக் கோரி விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க திங்கள்கிழமை வந்தனா். அப்போது பையில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா். இந்த நிலையில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை மீட்டு சூலக்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பினா். இது தொடா்பாக கூரைக்குண்டு கிராம நிா்வாக அலுவலா் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் தாய், மகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, சென்னை அசோக்நகா் மாந்தோப்பு காலனியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (72). இவா் தனது சொத்து தொடா்பான பிரச்னையைத் தீா்க்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க திங்கள்கிழமை வந்தாா். அப்போது தன்னிடம் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். இதுதொடா்பாக அவா் மீதும் சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.