விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வாடிப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம் களத்து வீடு பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் நாகராஜன் (29). இவா் செவ்வாய்க்கிழமை காலையில் அய்யங்கோட்டையில் இருந்து நகரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். நகரி மயானம் பகுதியில் நாகராஜனின் இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com