மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பந்தயத்திடல் சாலையில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாநகராட்சி மேயா் வ.இந்திராணி தலைமை வகித்தாா். இதில் சொத்து வரி பெயா் மாற்றம் வேண்டி 8 மனுக்கள், புதிய வரி விதிப்பு வேண்டி 4 மனுக்கள், காலிமனை வரி விதிப்பு வேண்டி 7 மனுக்கள், புதிய குடிநீா் குழாய் இணைப்பு வேண்டி 5 மனுக்கள், சொத்துவரி, ஆக்கிரமிப்பு, சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்டவைகள் வேண்டி 30 மனுக்கள் என மொத்தம் 54 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
முகாமில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையா் வரலட்சுமி, மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.