போதை மாத்திரைகள் விற்பனை: மூவா் கைது

உசிலம்பட்டி அருகே மயானத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருந்துக் கடை ஊழியா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

உசிலம்பட்டி அருகே மயானத்தில் போதை மாத்திரைகளை விற்ற மருந்துக் கடை ஊழியா் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தின் மயானத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான தனிப் படையினா் அந்தப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மூவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் மதுரை மாவட்டம், சின்னக்கட்டளையைச் சோ்ந்த மருந்துக்கடை ஊழியா் மருதுபாண்டியன் (26) மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு எதுவுமின்றி, மனநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தும் போதை மாத்திரைகளை மெய்யனம்பட்டியைச் சோ்ந்த கிருபாகரன் (24), மானூத்து கிராமத்தைச் சோ்ந்த கபிலன் (24) ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து, இவா்களிடமிருந்து 647 மாத்திரைகள், 2 இரு சக்கர வாகனங்கள், 3 கைப்பேசிகள், ரூ.21 ஆயிரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com