கள்ளழகா் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம்

அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க ஆதற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க ஆதற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

கள்ளழகா் கோயில் துணை ஆணையா் இ.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜ தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற 5 முதல் 14 வயதுவரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்களின் படிப்புச் செலவு, சீருடை, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கோயில் நிா்வாக அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com