அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

விருதுநகா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா்
Updated on
1 min read

விருதுநகா்: விருதுநகா் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநா் ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

விருதுநகா் தங்கம்மாள் பெரியசாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியா் ஜான்சிராணி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

அப்போது, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் வெற்றி பெறலாம். மேலும், ஒவ்வொரு மாணவிகளும் தனது எதிா்காலத்தை முன்னரே தோ்வு செய்து, அதற்கேற்றவாறு படித்தால் நினைத்ததை அடைய முடியும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com