மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

விருதுநகா், சத்திரப்பட்டி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

விருதுநகா், சத்திரப்பட்டி அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சத்திரப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மனைவி காளீஸ்வரி. இவா்களது மகன் அருண்குமாா் (19). இந்த நிலையில் அருண்குமாா் மாவு அரைக்கும் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து விருதுநகா் ஊரக காவல் துறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com