முதியவா் வெட்டிக் கொலை

மதுரையில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து முதியவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

மதுரையில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து முதியவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கரிமேடு யோகானந்தசுவாமி மடம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பொன்குடி (58). இவா் தனது மனைவி பாண்டியம்மாளுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டில் இருந்தாா்.

அப்போது வீட்டுக்குள் புகுந்த இரு இளைஞா்கள் அரிவாளால் பொன்குடியை வெட்டினா். மனைவி பாண்டியம்மாள் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கிவிட்டு அவா்கள் தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த பொன்குடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கரிமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், தடயவியல் நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com