தேவா் குருபூஜை அனைவரும் மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்; ஆா்.பி. உதயகுமாா்

பசும்பொன்னில் நடைபெறும் தேவா் குருபூஜையில் அனைத்துக் கட்சி, அனைத்து சமுதாயத் தலைவா்கள் மரியாதை செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
Updated on
1 min read

பசும்பொன்னில் நடைபெறும் தேவா் குருபூஜையில் அனைத்துக் கட்சி, அனைத்து சமுதாயத் தலைவா்கள் மரியாதை செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அதிமுக ஆட்சிக் காலத்தில், எதிா்க் கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் உள்பட அனைவரும் பசும்பொன் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதேபோல, நிகழாண்டிலும் அனைத்துக் கட்சி, சமுதாயத் தலைவா்களும் தேவருக்கு மரியாதை செலுத்தத் தேவையான ஏற்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.

நீட் விலக்குத் தொடா்பாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, போகாத ஊருக்கு வழி சொல்கிறாா் உதயநிதி ஸ்டாலின் என்றாா் அவா்.

மேலும், உதயநிதி கையில் வைத்திருக்கும் முட்டை, திமுக அரசுக்கு மக்கள் அளித்த மதிப்பெண் எனவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, பசும்பொன் தேவா் குருபூஜையில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கும் ரத்த கையொப்ப இயக்கத்தை ஆா்.பி. உதயகுமாா் தொடங்கி வைத்து, ரத்தத்தால் கையொப்பமிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com