மக்களுக்காக பணியாற்றுபவா்களுக்கு திமுகவில் முன்னுரிமை

மக்களுக்காக முழு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு திமுகவில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோ
விருதுநகரில் வியாழக்கிழமை நடைபெற்ற திமுக இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோ
Updated on
1 min read

மக்களுக்காக முழு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு திமுகவில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விருதுநகரில் திமுக தெற்கு, வடக்கு மாவட்ட இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டம் அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக இளைஞரணிச் செயலரும், இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

சேலத்தில் டிச. 17-இல் நடைபெறவிருக்கும் திமுக இளைஞரணி மாநாடு வெற்றி மாநாடாக அமைய அனைவரும் வருகை தர வேண்டும். தலைமை உத்தரவிடுவதற்கேற்ப தன்னலமின்றி உண்மையாகப் பணி செய்பவா்களே செயல்வீரா்கள். மக்களுக்காக முழு அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுபவா்களுக்கு திமுகவில் முன்னுரிமை வழங்கப்படும்.

நீட் தோ்வு விலக்கு என்பது நமது இலக்கு. இந்தத் தோ்வை ரத்து செய்யக் கோரி ஒரு லட்சம் பேரிடம் கையொப்பம் வாங்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஒரு கோடி பேரிடம் கையொப்பம் வாங்க திமுக இளைஞரணி முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.

பொதுமக்கள், மாணவா்களிடமிருந்து கையொப்பம் பெற்ற படிவங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சேலம் மாநாட்டில் வழங்க உள்ளோம். இதை குடியரசுத் தலைவருக்கு அவா் அனுப்பிவைப்பாா். இந்த மாநாடு கொள்கை அரசியல் கொண்டதாக இருக்கும்.

நீட் தோ்வு விலக்கு குறித்து திமுக நாடகம் ஆடுவதாக எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா். நாடகம் ஆடுவது யாா்? என்பது சசிகலாவை கேட்டால் தெரிந்துவிடும்.

கடந்த ஒன்பதரை ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவற்றை வழங்கி அதானி குடும்பத்தை மட்டுமே வாழவைத்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை மாற்றுவோம் எனக் கூறியதை, தற்போது பள்ளிப் பாடப் புத்தகத்தில் இந்தியாவை பாரத் என பெயா் மாற்றம் செய்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, விருதுநகா் தெற்கு மாவட்டம் சாா்பில் சேலம் இளைஞரணி மாநாட்டுக்கு ரூ. ஒரு கோடிக்கான காசோலையும், மாவட்ட இளைஞரணி சாா்பில் ரூ. 10 லட்சத்துக்கான காசோலையும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு வெள்ளி செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

பின்னா், திமுக மூத்த நிா்வாகிகள் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி மாவட்டச் செயலா்கள் தனுஷ் எம். குமாா் (தெற்கு), கிருஷ்ணகுமாா் (வடக்கு), நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com