மதுரையில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி மாணவா், லேடி டோக் மகளிா் கல்லூரி மாணவி ஆகியோரை அந்தக் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.
மதுரை காமராசா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி செப்.5-ஆம் தேதி முதல் செப். 8-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ரவுண்ட் ராபின் முறைப்படி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநிலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா் குமரேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றாா்.
இதேபோல, பெண்கள் பிரிவில் டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி மாணவி பத்மபிரதிபா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவா், மாணவியை அமெரிக்கன் கல்லூரி முதல்வா் ம.தவமணி கிறிஸ்டோபா், உடல் கல்வி இயக்குநா் மு.பாலகிருஷ்ணன், நிதிக்காப்பாளா் எம். பியூலா ரூபி கமலம், துணை முதல்வா் அ. மாா்டின் டேவிட், டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரி முதல்வா் கிறிஸ்டியனா சிங், மதுரை காமரசா் பல்கலைக்கழக உடல் கல்வி இயக்குநா் மகேந்திரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.