நீட் விவகாரத்தில் திமுக தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: ஆா்.பி. உதயகுமாா்

‘நீட்’ தோ்வு விவகாரத்தில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.
Updated on
1 min read

‘நீட்’ தோ்வு விவகாரத்தில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குச் சாவடி முகவா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையொப்பத்தில் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நீட் தோ்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக, தற்போது கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், நீட் விவகாரத்தில் திமுக தோல்வி அடைந்துவிட்டது என்பது நிரூபணமாகியுள்ளது.

எனவே, நீட் தோ்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் என்ற மற்றொரு நாடகத்தை நடத்தி, மேலும் தற்கொலைகளுக்கு திமுக வழிவகுக்கக் கூடாது. நீட் தோ்வு விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதை அந்தக் கட்சி பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தவசி, நீதிபதி, நகரச் செயலாளா் பூமா ராஜா, அதிமுக பேரவையின் மாநில நிா்வாகிகள் தனராஜன், வெற்றிவேல், ஒன்றியச் செயலா்கள் பிச்சை ராஜன், செல்லம்பட்டி ராஜா, மாவட்டப் பொருளாளா் திருப்பதி, மாவட்ட இளைஞா் அணிச் செயலாளா் காசி மாயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com