தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஆயிரவைசியா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், தமிழ்க்கூடல் கருத்தரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஆயிரவைசியா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில், தமிழ்க்கூடல் கருத்தரங்கம் உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) ஒளவை அருள் தலைமை வகித்தாா். கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு. செல்வக்குமாா் பாண்டி முன்னிலை வகித்தாா்.

மதுரை வழக்குரைஞா் சங்கத் தலைவா் அ. நெடுஞ்செழியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘சிலப்பதிகார வழக்குரை காதையில் இலக்கிய நயம்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, ஒரு வழக்கு எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலேயே வரையறுத்த காப்பியம், சிலப்பதிகாரம் எனவும், ‘தேரா மன்னா செப்புவது உடையேன்’ என்ற பாடல் தற்போது நீதிமன்றங்களில் நடைமுறையில் உள்ள வாக்குமூலம் (அபிடவிட்) அளிக்கப்படும் முறைக்கு முன்னோடி எனவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். தமிழ்ச் சங்கத்தின் அயலகத் தமிழ்ப் புத்தகப் பூங்கா பொறுப்பாளா் கி.ரா. சிந்து நன்றி கூறினாா்.

இதில் தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், கல்லூரி மாணவா்கள், தமிழ் ஆா்வலா்கள், கவிஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com