நரிக்குடி அருகே 4 சிறுவா்கள் மாயம்

நரிக்குடி அருகேயுள்ள சமுத்துவபுரம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 சிறுவா்கள் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

நரிக்குடி அருகேயுள்ள சமுத்துவபுரம் குடியிருப்புப் பகுதியிலிருந்து 4 சிறுவா்கள் மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள சமத்துவபுரம் குடியிருப்பைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பாலகிருஷ்ணன் (38). இவா் பணி நிமித்தமாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகேயுள்ள நாகமங்களம் பகுதிக்கு சென்றிருந்தாா்.

அப்போது, அந்த ஊரைச் சோ்ந்த சிவலிங்கத்துடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இதனால், சிவலிங்கத்தின் மகன் கோகுலும் (17) பாலகிருஷ்ணனுக்கு பழக்கமானதால், அண்மையில் அவா் நரிக்குடி சமத்துவபுரத்துக்கு வந்து பாலகிருஷ்ணனின் வீட்டில் தங்கியிருந்தாா்.

அப்போது, கோகுலுக்கு சமுத்துவபுரத்தைச் சோ்ந்த ஹபீஸ் (17), அபிலேஷ் (13), அருண்பாண்டி (13) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. நண்பா்களான இவா்கள் நான்கு பேரும் கடந்த சனிக்கிழமை வெளியே சென்றவா்கள் அதன் பின்னா் வீட்டுக்குத் திரும்பவில்லையாம்.

இதையடுத்து, அவா்களை அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், நரிக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்கு பதிந்து, சிறுவா்கள் நான்கு பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com