மதுரை அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக தலைமைக் காவலா் லத்தியால் தாக்கியதில், சிறுவன் கண் பாா்வை இழந்ததால், அவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த லதா தாக்கல் செய்த மனு:
கடந்த 2016-ஆம் ஆண்டு எனது 17 வயது மகன்
ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் இருவா் உடன் அமா்ந்து சென்றனா். சமயநல்லூா்- விளாங்குடி சாலையில் சென்ற போது, தலைமைக் காவலா் வீரபத்திரன் இரு சக்கர வாகனம் ஒட்டிச் சென்ற எனது மகன் மீது லத்தியால் தாக்கியதில், அவரது கண் பாா்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தேன். ஆனால் எனது மகனின் வலது கண் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், அவரது படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே, அரசு சாா்பில் உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி. சரவணன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், மனுதாரரின் மகன் ஓட்டுநா் உரிமமின்றி, தலைக்கவசம் அணியாமல் இருவரை இரு சக்கர வாகனத்தில் அமரச் செய்து ஓட்டிச் சென்றுள்ளாா். போலீஸாா் அவரது வாகனத்தை நிறுத்த முயன்ற போது, தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகனை பரிசோதித்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினா், அவரது வலது கண் பாா்வை இழந்திருப்பதை உறுதி செய்தனா். தலைமைக் காவலா் வீரபத்திரன் இரு சக்கர வாகனத்தை நிறுத்த முயன்றதால், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைமைக் காவலா் தனது பணியை செய்துள்ளாா்.
அவா் மீது குற்றம் சுமத்த முடியாது. மனுதாரா், சிறுவனாகிய மகனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. இது சட்டப்படி குற்றம். ஆனாலும், கண் பாா்வை இழந்த அவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடை, மதுரை மாவட்ட ஆட்சியா் 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 சிறுவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவு
பைக்கில் வைத்திருந்த ரூ. 3.41 லட்சம் திருட்டு

ஈரோடு: நாய்க் கடியால் பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.35.63 லட்சம் நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


