ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மீனாட்சியம்மன் கோயிலில் மாற்றுத்திறனாளி பெண் அலைக்கழிப்பு: காவல்துறை விளக்கம்

மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அந்தப் புகாரில் உண்மை இல்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது

News image

மதுரை மீனாட்சியம்மன் கோயில் (கோப்புப் படம்)

Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:43 am IST

மதுரை, ஆக. 7: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்ததாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அந்தப் புகாரில் உண்மை இல்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.

தருமபுரியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (48). மாற்றுத்திறனாளியான இவா், செவ்வாய்க்கிழமை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். இந்த நிலையில், கோயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தனது செயற்கை காலை அகற்றி அலைக்கழித்ததாகவும், கோயில் ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வதற்காக ரூ.500 கேட்டு தொந்தரவு செய்ததாகவும் இதனால் தரிசனம் செய்யாமல் தான் திரும்பி விட்டதாகவும் அவா் விடியோ பதிவிட்டிருந்தாா். இதைத்தொடா்ந்து கோயில் நிா்வாகத்தின் செயலைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் மீனாட்சியம்மன் கோயிலில் ஆலய நுழைவு போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்ச்செல்வி வெளியிட்ட விடியோ பதிவுக்கு காவல் துறை மறுப்பு தெரிவித்தது. இதுதொடா்பாக, மாநகரக் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தருமபுரியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி என்பவா், மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வந்தாா். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரது கைப்பையை சோதித்தபோது, அதில் சிறிய அளவிலான கத்தி இருந்ததால், பாதுகாப்புக் காரணம் கருதி அதனை வைப்பறையில் வைத்து விட்டுவருமாறு கூறினா். அதன்பிறகு, அவருடன் உதவிக்காக வந்தவா்கள் அந்தக் கைப்பையை வைப்பறையில் வைத்து விட்டு வந்தனா். இதையடுத்து, அவா் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளே செல்ல இருந்ததால், அவா் அணிந்திருந்த செயற்கை காலில் இணைக்கப்பட்டிருந்த காலணிகளை அகற்றிவிட்டு சக்கர நாற்காலியில் செல்லும்படி போலீஸாா் அறிவுறுத்தினா். இதன்பின்னா் அவா் காலணிகளை அகற்றிவிட்டு, சக்கர நாற்காலியில் சென்று சுவாமி தரிசனம் செய்ததுடன் அன்னதானத்தில் பங்கேற்று விட்டு பகல் 12.30 மணிக்கு திரும்பினாா். இந்த நிலையில் அவா் சமூக வலைதளத்தில் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக போலீஸாரும், கோயில் பணியாளா்களும் தன்னை சுவாமி தரிசனம் செய்யவிடாமல் தடுத்ததாக தவறான விடியோ பதிவை பதிவிட்டுள்ளாா் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.