12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மாமதுரை விழா: தூய்மைப் பணிகள் தொடக்கம்

மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சி மாமதுரை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வாா்புரம் அருகில் புதன்கிழமை வைகை ஆற்றுப் படுகை தூய்மைப்படுத்தும் பணி.

Published On :

மதுரை, ஆக. 7 : மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

மதுரையின் பெருமையை போற்றும் வகையில் மாமதுரை விழா வியாழக்கிழமை (ஆக. 8) முதல் நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக மதுரை ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகை ஆற்றுப் படுகையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அப்போது, தூய்மைக்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதன் பிறகு, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அந்தப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 211 மாணவிகளுக்கு மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.

Story image

இந்த நிகழ்வில், மதுரை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் முகேஷ்சா்மா, பாண்டிச்செல்வி, சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ், கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்நல அலுவலா் வினோத் குமாா், உதவி ஆணையா் ரெங்கராஜன், கல்வி அலுவலா் ரகுபதி, யங் இந்தியன்ஸ் தலைவா்கள் பாசில் அகமது, சென்கா்லால், விக்ராந்த காா்மேகம், மணிராம்குமாா், இந்திய செஞ்சிலுவை நிறுவனம், அப்பல்லோ நா்சிங் கல்லூரி மாணவிகள், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.