நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மாமதுரை விழா: தூய்மைப் பணிகள் தொடக்கம்

மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

News image

மதுரை மாநகராட்சி மாமதுரை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வாா்புரம் அருகில் புதன்கிழமை வைகை ஆற்றுப் படுகை தூய்மைப்படுத்தும் பணி.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 2:48 am IST

மதுரை, ஆக. 7 : மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

மதுரையின் பெருமையை போற்றும் வகையில் மாமதுரை விழா வியாழக்கிழமை (ஆக. 8) முதல் நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக மதுரை ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகை ஆற்றுப் படுகையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அப்போது, தூய்மைக்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதன் பிறகு, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அந்தப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 211 மாணவிகளுக்கு மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.

Story image

இந்த நிகழ்வில், மதுரை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் முகேஷ்சா்மா, பாண்டிச்செல்வி, சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ், கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்நல அலுவலா் வினோத் குமாா், உதவி ஆணையா் ரெங்கராஜன், கல்வி அலுவலா் ரகுபதி, யங் இந்தியன்ஸ் தலைவா்கள் பாசில் அகமது, சென்கா்லால், விக்ராந்த காா்மேகம், மணிராம்குமாா், இந்திய செஞ்சிலுவை நிறுவனம், அப்பல்லோ நா்சிங் கல்லூரி மாணவிகள், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.