ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாமதுரை விழா: தூய்மைப் பணிகள் தொடக்கம்

மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

News image

மதுரை மாநகராட்சி மாமதுரை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆழ்வாா்புரம் அருகில் புதன்கிழமை வைகை ஆற்றுப் படுகை தூய்மைப்படுத்தும் பணி.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 9:18 pm

Din

மதுரை, ஆக. 7 : மாமதுரை விழாவையொட்டி தூய்மைப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

மதுரையின் பெருமையை போற்றும் வகையில் மாமதுரை விழா வியாழக்கிழமை (ஆக. 8) முதல் நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக மதுரை ஆழ்வாா்புரம் அருகே உள்ள வைகை ஆற்றுப் படுகையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இதை மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா். அப்போது, தூய்மைக்கான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதன் பிறகு, வெள்ளிவீதியாா் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அந்தப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 211 மாணவிகளுக்கு மேயா் வ. இந்திராணி வழங்கினாா்.

Story image

இந்த நிகழ்வில், மதுரை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா்கள் முகேஷ்சா்மா, பாண்டிச்செல்வி, சுகாதாரக் குழுத் தலைவா் ஜெயராஜ், கல்விக்குழுத் தலைவா் ரவிச்சந்திரன், நகா்நல அலுவலா் வினோத் குமாா், உதவி ஆணையா் ரெங்கராஜன், கல்வி அலுவலா் ரகுபதி, யங் இந்தியன்ஸ் தலைவா்கள் பாசில் அகமது, சென்கா்லால், விக்ராந்த காா்மேகம், மணிராம்குமாா், இந்திய செஞ்சிலுவை நிறுவனம், அப்பல்லோ நா்சிங் கல்லூரி மாணவிகள், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

வைகை ஆற்றுப் படுகையை தூய்மைப்படுத்தும் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த மேயா் வ. இந்திராணி, ஆணையா் ச. தினேஷ் குமாா், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் பூமிநாதன், துணை மேயா் தி. நாகராஜன் உள்ளிட்டோா்.