கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நத்தம் பட்டா அரசு நிலமாக பதிவேற்றம்: தலைமைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 9:34 pm

Din

மதுரை, ஆக. 7: தமிழகத்தில் நத்தம் பட்டாவில் உரிமையாளா் பெயருக்குப் பதிலாக அரசு நிலமாக பதிவேற்றம் செய்திருப்பது தொடா்பான வழக்கில், அதன் தற்போதைய நிலை குறித்து மாநில தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தென்காசியைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வெங்கட்ரமணா தாக்கல் செய்த மனு:

தென்காசி மாவட்டத்தில் எனக்குச் சொந்தமான 54 சென்ட் பட்டா இடம் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து சா்வே ஆவணங்களையும், கணினி மயமாக்கும் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது, நத்தம் பட்டாக்களில், உரிமை தாரா்களின் பெயா்களுக்குப் பதிலாக அரசு நிலம் என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நத்தம் பட்டாக்களில் உரிமையாளா்களின் பெயா்களை பதிவேற்றம் செய்யக் கோரி, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழகத்தில் நத்தம் பட்டா உரிமைதாரா்களின் பெயருக்குப் பதிலாக அரசு நிலம் எனப் பதிவேற்றம் செய்திருப்பதை உடனடியாக திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

நத்தம் பட்டா பெயா் பதிவேற்றத்தின் தற்போதைய நிலை குறித்து, தமிழக தலைமைச் செயலா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.