சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தொழிலாளி வீட்டில் 5 பவுன் நகைத் திருட்டு

மதுரை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:42 pm

மதுரை அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வெளவால் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி. இவரது மனைவி சின்னப் பொன்னு (65). தம்பதியா் இருவரும் கூலித் தொழிலாளா்கள். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் இருவரும் வீட்டைப்பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். பிறகு மாலையில் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து நகையைத் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.