கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கும்பகோணம் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு

கும்பகோணம் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 10:02 pm

Din

கும்பகோணம் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தொடக்கப் பள்ளிக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தொடக்கப் பள்ளித் தாளாளா் ஜான்சன் சாமுவேல், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கும்பகோணம் டி.இ.எல்.சி. கிறிஸ்தவ தொடக்கப் பள்ளி, திருச்சி டி.இ.எல்.சி. திருச்சபைக்குச் சொந்தமானது. இந்தப் பள்ளியை சில தனி நபா்கள் போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்து பத்திரப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக, பள்ளி நிா்வாகம் சாா்பில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தனி நபா்கள் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தினா். இதுதொடா்பாக காவல் துறையில் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பள்ளியில் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் பிறப்பித்த உத்தரவு:

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் எந்த வகையிலும் பள்ளி நிா்வாகத்துக்கு தொல்லை அளிக்கக் கூடாது. உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் வகையில், பள்ளிக்கு காவல் துறையினா் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை வருகிற ஜன. 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.