நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கீழடி அகழாய்வுப் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் மத்திய தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட 5,765 பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :1 மார்ச் 2024, 12:13 am IST

கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் மத்திய தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்ட 5,765 பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கனிமொழி மதி, கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு: சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு சாா்பில், தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது, தமிழக கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் தொடா்பான ஏராளமான பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பொருள்கள் குறித்து அமா்நாத் ராமகிருஷ்ணன், மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தாா். அவரால் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, நீதிபதி பி. தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்: மத்திய தொல்லியில் துறையினா் கீழடியில் ஆய்வு செய்து கண்டறிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கீழடி அகழாய்வுப் பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக அமா்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்றாா். மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மத்திய தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017-ஆம் ஆண்டு குவாஹாட்டிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பிறகு, கோவாவுக்கு இடமாறுதல் செய்யப்பட்ட அவா், தற்போது சென்னையில் தென்னிந்திய கோயில்களின் தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். கீழடி முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் மொத்தம் 5,765 பொருள்கள் கிடைத்தன. அவை அனைத்தும் சென்னையில் மத்திய தொல்லியல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ளன. இந்தப் பொருள்கள் அனைத்தும் விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பணிபுரியும் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. அதை வெளியிட்ட பிறகு, மத்திய தொல்லியல் துறையினரிடம் உள்ள 5,765 தொல்லியல் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தப் பொருள்களை மாநில அரசு பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.