மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் கனிமொழி மதி, கடந்த 2016-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொது நல மனு: சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு சாா்பில், தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அப்போது, தமிழக கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள் தொடா்பான ஏராளமான பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன. இந்த நிலையில், அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. முதல், இரண்டாம் கட்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட பொருள்கள் குறித்து அமா்நாத் ராமகிருஷ்ணன், மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தாா். அவரால் கண்டறியப்பட்ட தொல்லியல் பொருள்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, நீதிபதி பி. தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.