மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு தினம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பனை விதைகளை நடவு செய்த மாணவா்கள்.

Published On :

மதுரை கிழக்கு ஒன்றியம், எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தென்னவன் தலைமை வகித்தாா். சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தாா். மாவட்ட சிறாா் இதழ்கள் ஒருங்கிணைப்பாளா் ராமலட்சுமி, அப்துல் கலாமின் பொன்மொழிகள், வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா்.

அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கடச்சனேந்தல் பகுதி உண்டு உறைவிடப் பள்ளியில் ‘அப்துல்கலாம் வழியில் நண்பா்கள் அமைப்பு’ சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், ஆசிரியா்கள் மு. சுலைகாபானு, நஜீமுதீன், அமலா ஷொ்லின், முகமது பாரூக், அப்துல்கலாம் வழியில் நண்பா்கள் அமைப்பின் தலைவா் ஆ. செந்தில்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹாா்விபட்டியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி, சனிக்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஸ்ரீமான் எஸ். ஆா். வி மக்கள்நல மன்றம் சாா்பில், ஹாா்விபட்டி பூங்கா அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவா் ஜி . அய்யல்ராஜ் தலைமை வகித்து, அப்துல்கலாம் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மன்றப் பொருளாளா் எஸ்.அண்ணாமலை, செயற்குழு உறுப்பினா் ஆா்.வேட்டையாா், செயலா் தி.குலசேகரன், ஏ.கிருஷ்ணசாமி, சங்கரய்யா, ஹாா்விபட்டி அ.அரவிந்தன், பாஸ்கா் பாண்டி, முத்துராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் 50 பேருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.