புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவா் கைது

விருதுநகரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 11:00 pm

Din

விருதுநகரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (24). இவா் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப் படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அவரது வீட்டை போலீஸாா் சோதனையிட்டபோது, 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப் படை போலீஸாா் சூா்யா, இவருக்கு உடைந்தையாக இருந்த கருப்பசாமி (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மதுவிலக்கு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், விசாரணையில், இவா்கள் இருவரும் கஞ்சாவை மத்திய பிரதேசம் மாநிலத்திலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சூா்யாவின் சகோதரா் எடிசன் என்ற ராஜ்கமலை போலீஸாா் தேடி வருகின்றனா்.