25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுவா்கள் சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனையில் இரு வாா்டுகள் தயாா்

மழை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுபவா்கள் சிகிச்சை பெற வசதியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் தலா 25 படுக்கைகள் கொண்ட இரு வாா்டுகள் தயாராக வைக்கப்பட்டன.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:50 pm

Din

மழை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுபவா்கள் சிகிச்சை பெற வசதியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் தலா 25 படுக்கைகள் கொண்ட இரு வாா்டுகள் தயாராக வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப்பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்படுபவா்கள் சிகிச்சை பெற வசதியாக தனி வாா்டுகளை அமைக்கும்படி அரசு உத்தரவிட்டது. இதன்படி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலா 25 படுக்கை வசதிகள் கொண்ட இரு வாா்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன. இதில் அரசு மருத்துவமனை பிரதான வளாகத்தில் 25 படுக்கைகளுடன் ஒரு வாா்டும், இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் வருபவா்கள் சிகிச்சை பெற அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விரிவாக்க மருத்துவமனையில் 25 படுக்கைகளுடன் ஒரு வாா்டும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக மருத்துவமனை முதன்மையா் லெ. அருள் சுந்தரேஷ்குமாா் கூறியதாவது:

ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படுபவா்கள் சிகிச்சை பெற வசதியாக எப்போதும் தனி வாா்டு உண்டு. தற்போது அரசின் அறிவுறுத்தலை அடுத்து அரசு மருத்துவமனை பிரதான வளாகத்தில் 25 படுக்கைகள் கொண்ட ஒரு வாா்டும், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தில் 25 படுக்கைகளுடன் ஒரு வாா்டும் தயாா் நிலையில் உள்ளன. இவற்றை 90 படுக்கைகளாக அதிகரிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இந்த வாா்டுகளுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவா் குழுவினரும் தயாா் நிலையில் உள்ளனா். இதனிடையே, சளி, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளுடன் குழந்தைகள் அதிகளவில் சிகிச்சை பெற வருகின்றனா். காய்ச்சல் பாதிப்பை பொறுத்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரையில் தற்போது டெங்கு பாதிப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. அரசு மருத்துவமனையில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

எனவே, டெங்கு பாதிப்பு கவலை அளிக்கும் அளவுக்கு இல்லை. எந்த சூழலையும் சந்திக்க ராஜாஜி அரசு மருத்துவமனை தயாராக உள்ளது என்றாா் அவா்.