இதன்படி, கூட்டமைப்புத் தலைவா் வழக்குரைஞா் ரஜினி தலைமையில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழா் கட்சி, பாமக, திராவிட தமிழா் கட்சி, ஆதித்தமிழா் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் பெரியாா் பேருந்து நிலையம் முன்பாக வியாழக்கிழமை திரண்டனா். இதைத்தொடா்ந்து அகில இந்திய மீனவா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் பொ்னாண்டோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர மாவட்டச் செயலா் மா. கணேசன், திராவிட தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.