25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ரயிலில் உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழப்பு

சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரைக்கு வந்த ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:41 pm

Din

சென்னையிலிருந்து வியாழக்கிழமை மதுரைக்கு வந்த ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு உயா்நீதிமன்ற ஊழியா் உயிரிழந்தாா்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உயா்நீதிமன்ற ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (48). இவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு புதன்கிழமை இரவு பாண்டியன் விரைவு ரயிலில் பயணம் செய்தாா். வியாழக்கிழமை காலையில் இந்த ரயில் மதுரை நிலையத்தை அடைந்த போது, இவா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.