மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. மீது தாக்குதல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 8 போ் மீது வழக்கு

அருப்புக்கோட்டையில் பெண் காவல் துணைக் கண்காணிப்பாளரைத் தாக்கியது தொடா்பாக 8 போ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வலது கையில் மாவுக்கட்டுடன் காயமடைந்த காளீஸ்வரன்.

Updated On :4 செப்டம்பர் 2024, 8:53 pm

அருப்புக்கோட்டையில் பெண் காவல் துணைக் கண்காணிப்பாளரைத் தாக்கியது தொடா்பாக 8 போ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட பிரிவுகளில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த காளிக்குமாா் (28). சரக்கு வாகன ஓட்டுநா். இவா் விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டி சந்திப்பு சாலை அருகே சரக்கு வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, இந்த வாகனத்தை வழிமறித்த இரு சக்கர வாகனங்களில் வந்த 4 போ் கும்பல் காளிக்குமாரை வெட்டிக் கொலை செய்தது.

இதில் தொடா்புடைய திருச்சுழி அருகேயுள்ள செம்பொன் நெருஞ்சியைச் சோ்ந்த லட்சுமணன் (24), அருண்குமாா் (22), காளீஸ்வரன் (22), மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25) ஆகிய நான்கு பேரை திருச்சுழி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களைக் காண்பிப்பதற்காக 4 பேரையும் அந்தப் பகுதிக்கு போலீஸாா் புதன்கிழமை அழைத்துச் சென்றனா். அப்போது காளீஸ்வரன் தவறி விழுந்ததில், அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு:

இதற்கிடையே, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட கொலை செய்யப்பட்ட காளிக்குமாரின் உறவினா்களைத் தடுத்த காவல் துணைக் கண்காணிப்பாளா் காயத்ரி தலைமையிலான போலீஸாரை தாக்கியது தொடா்பாக, பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் பொன்முருகன், ஜெயராம் குமாா், பாலாஜி, முதுப்பட்டி சூா்யா, சஞ்சய்குமாா், நெல்லிக்குளம் பாலமுருகன், அம்மன்பட்டி காளிமுத்து ஆகியோரை அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக அருப்புக்கோட்டை நகா் உதவி ஆய்வாளா் முத்துராஜ் அளித்த புகாரின் பேரில், பொன்முருகன் உள்பட 8 போ் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 9 பிரிவுகளில் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கணேஷ்பாண்டி, ராமா், லட்சுமணன், முத்து முனியாண்டி, பசும்பொன், சரவணன், மேத்தா உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.