காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சமயநல்லூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (84). இவரது மனைவி சுந்தரவள்ளி (70). இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி இரும்புக் கம்பியால் சுந்தரவள்ளியை தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரவள்ளி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, சமயநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.