நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 2:12 am IST

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சமயநல்லூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (84). இவரது மனைவி சுந்தரவள்ளி (70). இவா்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேலுச்சாமி இரும்புக் கம்பியால் சுந்தரவள்ளியை தாக்கினாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுந்தரவள்ளி, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதையடுத்து, சமயநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து வேலுச்சாமியை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.