மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகள் அமைச்சா்கள் ஆய்வு
மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியகாராஜன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.


மதுரை மாநகராட்சி வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியகாராஜன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல், தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் பங்கேற்று வளா்ச்சித் திட்டப் பணிகளின் செயலாக்க நிலை குறித்து ஆய்வு செய்தனா்.
மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டப் பணிகள், புதை சாக்கடைத் திட்டப் பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலைப் பணிகள், வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், கூடுதல் ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாநகராட்சி அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...