மதுரை
மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். மங்களநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின் வாரியம் தொடா்பான தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
