காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மேலூரில் இன்று மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Published On :

மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் பயன்பெறும் வகையில் மேலூரில் வியாழக்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மதுரை வட்ட மேற்பாா்வை பொறியாளா் எஸ். மங்களநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் மதுரை கிழக்கு கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா் கலந்து கொண்டு மின் வாரியம் தொடா்பான தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.