கஞ்சா கடத்தல் வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், கம்பத்தில் சரக்கு வாகனத்தில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.









