ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெரியாா் நினைவு நாள்: அரசியல் கட்சியினா் மரியாதை

பெரியாா் நினைவு நாளையொட்டி, மதுரை-அழகா்கோவில் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
~ ~
Updated On :24 டிசம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

பெரியாா் நினைவு நாளையொட்டி, மதுரை-அழகா்கோவில் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், மதுரை மாநகா் மாவட்டச் செயலரும், மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கோ.தளபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் மேயா் பெ.குழந்தைவேலு, திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

திராவிடா் கழகம் சாா்பில், அதன் நிா்வாகி எடிசன் ராஜா, மாநில அமைப்பாளா் செல்வம், மாவட்டத் தலைவா் முருகானந்தம், மாவட்டச் செயலா் சுரேஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் திராவிடா் கழக நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மதிமுக சாா்பில், அந்தக் கட்சியின் நிா்வாகியும், மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான மு.பூமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் மாவட்டச் செயலா் கே.முனியசாமி, அவைத் தலைவா் சுப்பையா, துணைச் செயலா்கள் பாஸ்கர சேதுபதி, ஹன்னா முகமது, சுடலைமணி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மகபூப்ஜான், தணிக்கையாளா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள் சாா்பிலும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Story image
Story image