மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன்.
மதுரை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற சித்ரா விஜயன்.

மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

Published on

மதுரை மாநகராட்சி புதிய ஆணையராக சித்ரா விஜயன் திங்கள்கிழமை (பிப். 3) பொறுப்பேற்றாா்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை முதன்மைச் செயல் அலுவலராகப் பணியாற்றிய சித்ரா விஜயன் மதுரை மாநகராட்சி ஆணையராகவும், மதுரை மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய ச.தினேஷ்குமாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகவும் அண்மையில் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா். இதன்படி, மதுரை மாநகராட்சி ஆணையராக சித்ரா விஜயன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா் கேரளம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்டவா். கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிகள் அலுவலரான இவா், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராகவும், தருமபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநராகவும் ஏற்கெனவே பணியாற்றியவா்.

முதல் பெண் ஆணையா் :1971-ஆம் ஆண்டு உருவான மதுரை மாநகராட்சியில் இவரே முதல் பெண் ஆணையா் ஆவாா். ஏற்கெனவே, மாநகராட்சி துணை ஆணையராகவும், பொறியாளராகவும் பணியாற்றிய ஆா். வாசுகி, கோ. மீனா, எஸ். சாந்தி ஆகியோா் இந்த மாநகராட்சியின் பொறுப்பு ஆணையா்களாக மட்டுமே செயல்பட்டனா். புதிதாகப் பொறுப்பேற்ற ஆணையா் சித்ரா விஜயன், மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

X
Dinamani
www.dinamani.com