கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரயிலில் கொண்டு வரப்பட்ட 240 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு பாா்சல் மூலம் கொண்டு வரப்பட்ட 240 கிலை புகையிலைப்பொருள்களை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:59 pm

Din

மைசூரு-தூத்துக்குடி ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு பாா்சல் மூலம் கொண்டு வரப்பட்ட 240 கிலை புகையிலைப்பொருள்களை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற ரயிலில் மதுரை ரயில் நிலையத்துக்கு 240 கிலோ எடையுள்ள 4 அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் பாா்சலில் வந்து சோ்ந்தன. மதுரை ரயில் நிலைய சரக்கு அலுவலகத்திலிருந்த பாா்சல்களை போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது, அசோக் என்ற பெயரில் இருந்த 240 கிலோ எடையுள்ள 4 அட்டைப் பெட்டிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, 4 பெட்டிகளையும் பிரித்து சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னா், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் அதை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.