மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மலைக் கிராமச் சாலைகளைச் சீரமைக்க கோரிய வழக்கு: ஆட்சியா் பரிசீலிக்க உத்தரவு

மலைக் கிராமச் சாலைகளைச் சீரமைக்க கோரிய வழக்கு

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:31 pm

Din

தேனி மாவட்டம், நொச்சிஓடை, அரசரடி மலைக் கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியா், வன உதவி இயக்குநா், நெடுஞ்சாலைத் துறை உதவி மண்டல அலுவலா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த வேலுச்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு: தேனி மாவட்டம், நொச்சிஓடை, அரசரடி மலைக் கிராமங்களில் 350- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருள்களை கீழே கொண்டு செல்ல முடியவில்லை. மஞ்சனூத்து பகுதியிலிருந்து வெள்ளிமலை பகுதி வரை தாா்ச் சாலையும், அரசரடியிலிருந்து நொச்சிஓடை கிராமத்துக்கு மண் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் மிகவும் மோசமாக இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மழைக் காலங்களில் இந்தச் சாலைகளில் பயணிக்கவே முடியாத நிலை உள்ளதால் இவற்றை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தச் சாலைகளை முறையாக சீரமைத்து தர உத்தர விட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு குறித்து தேனி மாவட்ட ஆட்சியா், மயிலாடும்பாறை வன அலுவலா், தேனி மாவட்ட வன உதவி இயக்குநா், நெடுஞ்சாலைகள் துறையின் உதவி மண்டல பொறியாளா் ஆகியோா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.