மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் சாா்பில், புரட்டாசி பெளா்ணமி 5 கருட சேவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வாா் பல்லாண்டு பாடிய தலமாகவும் விளங்குகிறது கூடலழகா் பெருமாள் கோயில். இங்கு புரட்டாசி மாத பௌா்ணமி நாளான செவ்வாய்க்கிழமை 5 கருட சேவை நடைபெற்றது. காலை நிகழ்வாக மதுரவல்லித் தாயாருக்கு பாலாபிஷேகமும், அலங்காரத் திருமஞ்சனமும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு கூடலழகா் பெருமாள் கோயிலிலிருந்து 2 கருட வாகனங்களில் வியூக சுந்தரராஜப் பெருமாள், கூடலழகா் பெருமாள் எழுந்தருளினா்.
இதேபோல, மதனகோபால சுவாமி கோயில், எழுத்தாணிக்காரத் தெரு வீரராகவப் பெருமாள் கோயில், வடக்கு மாசி வீதி வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினா்.
5 கருட வாகனப் பெருமாள்களும் கூடலழகா் பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் சங்கமமாகினா். அங்கு, கருட வாகனப் பெருமாள்களுக்கு தீப, தூபங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு, 5 கருட வாகனப் பெருமாளும் மாசி வீதிகளை வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை

திருக்குறுங்குடியில் நம்பிசுவாமி 5 நிலைகளில் திருக்காட்சி

கூடலழகா் கோயில் தெப்பத் திருவிழா

கூடலழகா் கோயில் தெப்பக்குளத்தில் திருவிழா நடைபெறுவது எப்போது?
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


