பண மோசடி: அதிமுகவினா் மூவா் கைது

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட அதிமுகவைச் சோ்ந்த 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூா் பேரூராட்சி அதிமுக 8-ஆவது வாா்டு செயலா் பட்டுராஜன் (52), அதிமுக உறுப்பினா்கள் கந்தநிலா (55), ராணி நாச்சியாா் (53) உள்ளிட்டோா் இணைந்து தனியாா் அறக்கட்டளை நடத்தி வருகின்றனா்.

இவா்கள் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னிடம் ரூ.1.38 கோடி மோசடி செய்ததாகவும் விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சோ்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியாா் ஆகிய மூவா் மீதும் விருதுநகா் மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com